/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் அழைப்பு
/
நெய்வேலியில் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் அழைப்பு
ADDED : ஆக 12, 2024 05:47 AM

சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உத்தரவின்படி, கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வரும் 14ம் தேதி காலை 10:00 மணியளவில் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
அதில், வீடுகள் தோறும் இளைஞரணி, மகளிரணியில் உறுப்பினர்கள் இணைப்பது, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இளைஞரணி சார்பில் பேச்சு போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது.
இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், இளைஞரணி, மகளிரணி உட்பட அனைத்து சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.