sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

/

சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 07, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே சமையல் தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி அடுத்த பு.சித்தேரி - வடுவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்ராஜ், 22; திருமணமாகாதவர். சமையல் தொழிலாளி. சமீபத்தில் உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் அப்பகுதி வயலில் உள்ள மரத்தில் துாக்கு போட்டுக் கொண்டார்.

உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அருண்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உடலை வேனில் ஏற்ற முயன்றனர். அதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட நேர இழுபறிக்குப் பின் போலீசார், நேற்று காலை உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us