/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்
நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்
நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 25, 2024 07:03 AM

பெண்ணாடம் : நரசிங்கமங்கலம் தார் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடத்தில் இருந்து எரப்பாவூர் வழியாக நரசிங்கமங்கலம் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வாகனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு செல்கின்றனர். இதில், எரப்பாவூர் முதல் நரசிங்கமங்கலம் கிராமம் வரை பல இடங்களில் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டும், சாலை உள்வாங்கியும் உள்ளது.
இதனால், இவ்வழியே செல்லும் பைக் மற்றும் சைக்கிளில் செல்வோர்கள் சாலை விரிசலில் சக்கரம் சிக்கி விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நரசிங்கமங்கலம் தார் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.