sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் காயம்

/

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் காயம்

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் காயம்

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் காயம்


ADDED : ஜூலை 12, 2024 05:15 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலூர் மத்திய சிறையில் இரு கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு, சென்னை திருவல்லிக்கேணி அழகுமுத்து,40; நெய்வேலி வடகுத்து கோபி,38; இருவரும் கொலை வழக்கில் கைது செய்து, கடந்த ஒராண்டாக விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை சிறை அறைக்குள் சென்றபோது, இருவரும் ஒருவரை, ஒருவர் தெரியாமல் மோதிக்கொண்டனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்த சக கைதிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக நேற்று காலை அறையில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் சிறையில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. சிறை காவலர்கள் விரைந்து சென்று இருவரையும் விலக்கிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த கோபியை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த மோதல் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us