/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி இறப்பு
/
கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதி இறப்பு
ADDED : ஆக 22, 2024 02:05 AM
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக் குறைவால் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பாசிக்குளம் புதுக் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பாஸ்கர்,39; இவர் அரசு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக, கடந்த 8ம் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த பாஸ்கருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டது. உடன், அவருக்கு சிறைத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து மத்திய சிறை அலுவலர் ரவி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.