ADDED : மார் 15, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மாமனார் புகாரின் பேரில், மாயமான மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் பாவாடை மகன் பூவராகமூர்த்தி. இவரது மனைவி சுவாதி, 30. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு அக்., மாதம் விபத்தில் பூவராகமூர்த்தி இறந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, சுவாதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சுவாதி மாமனார் புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.