sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு

/

விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு

விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு

விருதை வனப்பகுதியில் நாய் கடித்து மான் இறப்பு


ADDED : ஜூன் 04, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், விருத்தாசலத்தில் நாய் கடித்து இரண்டு வயது ஆண் மான் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை இரண்டு வயதுடைய ஆண் மான் இறந்து கிடந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறை அலுவலர் ரகுவரன் மற்றும் வனவர்கள்,இறந்த மானை மீட்டு, விருத்தாசலம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மான் நாய் கடித்து இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், மானின் உடல், கார்குடல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனவிலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், விருத்தாசலம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன விலங்குகள் இறந்து கிடப்பது தொடர்ச்சியாக உள்ளது. கோடை காலம் என்பதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது, நாய்கள் கடித்து இறக்கின்றன.

எனவே, வனவிலங்குகள் ஊருக்குள் தண்ணீர் தேடி வராத வகையில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us