sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு முதியவர் இறந்த சம்பவம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

/

இரு முதியவர் இறந்த சம்பவம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

இரு முதியவர் இறந்த சம்பவம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

இரு முதியவர் இறந்த சம்பவம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ADDED : மே 09, 2024 04:23 AM

Google News

ADDED : மே 09, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே வாந்தி, பேதியால் இரு முதியவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 65. இவர், வாந்தி, பேதி காரணமாக கடந்த 6ம் தேதி இறந்தார். இவர், குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கிராம மக்களிடையே தகவல் பரவியது.

இதனால், திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள் கடலுார் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த புலியூரை சேர்ந்த நாராயணசாமி,60;என்பவர் கடந்த 7ம் தேதி இறந்தார்.

அடுத்தடுத்து இரு முதியவர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் நேற்று புலியூர், தொண்டமாநத்தம், சின்னதானங்குப்பம் கிராமங்களில் முகாமிட்டு பொதுமக்களை பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

மேலும், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டதாக கூறப்பட்ட திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து விருந்தில் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில் மற்றும் உணவு சமைக்க பயன்படுத்திய எஞ்சிய பொருட்களை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us