ADDED : ஆக 03, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், புருகீஸ்பேட்டை மணி முத்தம்மை கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.கடலுார், புருகீஸ்பேட்டை மணி முத்தம்மை கோவிலில் ஆடி உற்சவம் கடந்த 25ம் தேதி துவங்கியது. கடந்த 28ம் தேதி தங்க ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று மகா அபிஷேகம், சாகை வார்த்தல், தீபாராதனை, செடல் உற்சவம் மற்றும் தீமிதி விழா, சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து கொண்டும், தீமிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (3ம் தேதி) மஞ்சள் நீராட்டு உற்சவம், நாளை விடையாற்றி உற்சவம், 9ம் தேதி உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.