ADDED : ஆக 04, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த அரியராவி திரவுபதி அம்மன் கோவில், தீமிதி உற்சவத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா, கடந்த மாதம் 16ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இன்று (4ம் தேதி) போர்மன்னன் நிகழ்ச்சி நடக்கிறது.