/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED : மே 25, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சங்கொலிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கடலுார், முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தீமிதி விழா கடந்த 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று 25ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம், தெப்ப உற்சவம் நடக்கிறது.

