/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவியுடன் தகராறு; விவசாயி தற்கொலை
/
மனைவியுடன் தகராறு; விவசாயி தற்கொலை
ADDED : செப் 07, 2024 05:42 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே குடும்பத் தகராறில் கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த பண்ணைகுச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 47; விவசாயி. இவரது மனைவி சுந்தரி. இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், சுந்தரி கோபித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன் தனது தாய் வீடான திருவதிகைக்கு சென்று விட்டார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த தனஞ்செயன் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து விட்டு பைக்கில் திருவதிகையில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றார். அங்கு மயங்கி விழுந்த அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று தனஞ்செயன் இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.