/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கல்
/
நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கல்
நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கல்
நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கல்
ADDED : ஆக 16, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: கடலுாரில் நடந்த சுதந்திர தின விழாவில், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.
சுதந்திர தின விழா, கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. விழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு கலெக்டர் விருது வழங்கினார்.
அதில் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பணிக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபனுக்கு கலெக்டர் விருது வழங்கினார். அதே போல் கீழணை செயற்பொறியாளர் கொஞ்சிநாதன், வல்லம்படுகை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோரும் விருது பெற்றனர்.