/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடிகம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தே.மு.தி.க., பிரமுகர் பலி
/
கொடிகம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தே.மு.தி.க., பிரமுகர் பலி
கொடிகம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தே.மு.தி.க., பிரமுகர் பலி
கொடிகம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தே.மு.தி.க., பிரமுகர் பலி
ADDED : ஆக 26, 2024 09:27 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கட்சி கொடிகம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தே.மு.தி.க. பிரமுகர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 40; தே.மு.தி.க., கிளை துணை செயலாளர். இவர் நேற்று காலை 9:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 5 பேருடன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுவதற்காக கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
கொடிகம்பம் நடுவதற்காக கம்பத்தை மேலே துாக்கிய போது , கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு அனைவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரகாஷ், மதியழகன், செல்வம், செல்வகுமார், சஞ்சய்காந்தி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.