/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
/
தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
ADDED : ஆக 10, 2024 04:35 AM
விருத்தாசலம்: தி.மு.க., பிரமுகரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சீனிவாசன்,50; தி.மு.க., பேரூர் இளைஞரணி அமைப்பாளர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன்,34; என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 4ம் தேதி இரவு, அங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணன், சீனிவாசனை ஆபாசமாக திட்டி, கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சரவணனை கைது செய்தனர்.