ADDED : மே 28, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லை பெரியநெல்லிக்கொல்லை இருமுடி மறைசாட்சி புனித செபஸ்தியார் ஆலய, 120 வது தேர்பவனி விழா நடந்தது.
இந்த ஆலயத்தில் 9 நாள் பெருவிழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 19ம் தேதி காலை 8.00 மணிக்கு நற்கருணை ஆராதனையில் பங்கு தந்தை சாமுவேல் உரையாற்றினார். 25ம் தேதி வரையில் தேர்பவனி திருப்பலி நடந்தது. 26ம் தேதி காலை பெருவிழா திருப்பலியும், முதல் நற்கருணை விருந்து உபசரிப்பும், இரவு 10.30 மணிக்கு மூன்று தேர்கள் அலங்கரித்து ஊர்வலம் நடந்தது.