ADDED : ஜூன் 10, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையில் தனியார் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்த சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, குண்டும், குழியுமாக உள்ள எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.