/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : மே 02, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக ஜானகி தேர்வு செய்யப்பட்டார்.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2024 -2025ம் ஆண்டிற்கான வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. தேர்தலை, மூத்த வழக்கறிஞர்கள் சம்பந்தம், ராமதாஸ், அன்பழகன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்தினர்.
அப்போது சங்கத்தின் புதிய தலைவராக ஜானகி, செயலாளராக மணிகண்டன், துணை செயலாளராக பாலகுரு, பொருளாளராக அமுதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.