நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ், 45; கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்தார்.இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது.தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனியே வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மரிய பிரான்சிஸ் வீட்டில் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு சுவற்றில் தனது தலையை இடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனையறிந்த சகோதரர் மரிய அந்தோணி, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு மயங்கி கிடந்த மரிய பிரான்சிஸ்சைமீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மரிய பிரான்சிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

