/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
/
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 03, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம், கடலுார் மாநகராட்சி பகுதியை சார்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு 3 நாள் பயிற்சி துவங்கியது. இதில் உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். தலைமை பயிற்றுனர் வேல்முருகன் பயிற்சி தொடர்பான நோக்கம் பற்றி விளக்கி பேசினார்.