/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாமாயில், துவரம் பருப்பு வாங்க அவகாசம் நீட்டிப்பு
/
பாமாயில், துவரம் பருப்பு வாங்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:56 AM
கடலுார்: ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களான பாமாயில், துவரம் பருப்பு இம்மாதம் இறுதி வரை பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், ஜுன்-2024 மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் 31ம் (ஜுலை 2024) வரை பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, மேற்படி பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஜுன்-2024 மாதத்திற்கு கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும்
நியாயவிலைக் கடைகளில் ஜுலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம், என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.