ADDED : செப் 12, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு சாலக்கரையை சேர்ந்தவர் சுப்ரமணி, 68; விவசாயி. இவர், கடந்த மாதம் 30ம் தேதி பைக்கில் கடலூர் நோக்கி சென்றார். நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணி நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் குமாரசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

