/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி; விருத்தாசலம் அருகே சோகம்
ADDED : செப் 01, 2024 11:30 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துார் புதுக்குப்பம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன், 46. இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு தோட்டத்தில் மின் விளக்கு போட சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த வெங்கடேசனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது மனைவி அம்சவள்ளி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.