ADDED : ஜூலை 20, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: சாலையை கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜாங்கம்,58; விவசாயி. இவர் நேற்று இரவு 9:30 மணிக்கு பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே வந்த பைக் ராஜாங்கம் மீது மோதியது. அதில் ராஜங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் ஓட்டி வந்த அதேபகுதியை சேர்ந்த கோபிநாத்,25; படுகாயமடைந்தார்.
தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் ராஜங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.