sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்

/

திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்

திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்

திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்


ADDED : ஜூன் 11, 2024 11:27 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி மற்றும் நெய்வாசல் கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே மின் மோட்டார் மற்றும் மோட்டார் ஒயர் திருட்டு அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்களுக்குச் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

விவசாயிகள் நெல், கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்களும் அழிந்துவிடும் அவலநிலை நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெள்ளாற்றங்கரையில் சில இளைஞர்கள், மோட்டார் ஒயரை எரித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த விவசாயி ஒருவர் அதைப்பார்த்ததும், அந்த இளைஞர்கள் தப்பியோடினர்.

அதில் அடையாளம் தெரிந்த இளைஞர் பற்றி, அவரது உறவினர் ஒருவரிடம் புகார் தெரிவித்தார். இதையறிந்த அந்த இளைஞர், மறுநாள் அந்த விவசாயியை சந்தித்து மிரட்டியுள்ளார்.

இதில் பயந்துபோன விவசாயிகள் மோட்டார் ஒயர் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க அஞ்சுகின்றனர். சிலர் மட்டும் ஆவினங்குடி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us