sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உழவர் சந்தை சாலையோர கடைகள் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

/

உழவர் சந்தை சாலையோர கடைகள் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

உழவர் சந்தை சாலையோர கடைகள் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

உழவர் சந்தை சாலையோர கடைகள் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை


ADDED : செப் 05, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் உழவர் சந்தை முன் சாலையோர நடைபாதை கடைகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கைவிடுத்தனர்.

கடலுார் உழவர்சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் நிலை நீடித்து வந்தது.

இதேபோன்று, உழவர் சந்தை எதிரில், நடைபாதை வியாபாரிகள், சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்தனர். இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

இங்கு நெரிசலை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் 26 பேரிகார்டுகள் வைத்தனர். வாகனங்கள் நிறுத்த தடை விதித்து பெரிய அளவிலான பேரிகார்டுகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடை வைப்பதற்கு சிறிய அளவிலான பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. ஆனால், பேரிகார்டுகளை தாண்டி, நடைபாதை வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் வைத்துள்ளனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் உழவர் சந்தை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக வைத்திருந்த கடைகள் அனைத்தையும் பேரிகார்டுக்கு உள்ளே வைக்க ஏற்பாடு செய்தனர். மேலும், பேரிகார்டுகளுக்கு வெளியில் கடைகள் வைக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுத்தனர்.






      Dinamalar
      Follow us