ADDED : ஜூன் 25, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் ஆனந்தநாயகி, 30.
இவருக்கும் அகரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தற்போது ஆனந்தநாயகி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த, 6 மாதமாக தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த ஆனந்தநாயகி திடீரென மாயமானார்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில மணிவண்ணன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.