ADDED : ஜூன் 10, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே கணவருடன் தகராறில் பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல் விவசாயி. இவரது மனைவி ஆனந்தஜோதி, 38; இவர்களுக்கு 14 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் விரக்தி அடைந்த ஆனந்தஜோதி, வீட்டில், சேலையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.