/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு
/
கடலுார் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு
ADDED : செப் 02, 2024 01:10 AM

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் நேற்று மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
கடலுார் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், விசை மற்றும்
பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். பிடித்து வரும் மீன்களை கடலுார் துறைமுகத்தில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் மீன்களின் விலை வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம் 750 ரூபாய், சங்கரா 300 ரூபாய், கனவாய் 150 முதல் 250 ரூபாய், மடவை 250 ரூபாய், பாறை 400 ரூபாய், பன்னிசாத்தான் 400 ரூபாய், இறால் சிறியவை 200 மற்றும் பெரியவை 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்றனர்.
இதேபோன்று மீனவர்கள் வலையில் ஆடா திருக்கை மீன்கள் அதிகளவில் சிக்கியது. இந்த மீன்கள் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், ஆடா திருக்கை மீன் 92 கிலோ வரை இருந்தது.