sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது

/

போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது

போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது

போலி ஆவணம் தயாரித்து மோசடி: இலங்கை அகதி கைது


ADDED : மே 10, 2024 12:35 AM

Google News

ADDED : மே 10, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் வசித்தவர் அழகர்சாமி மகன் தவனேஸ்வரன்,43. இவர் அகதி முகாமில் இருந்து தனது பெயரை நீக்கம் செய்து, சிறுவயதிலேயே வெளியே வந்து, குறிஞ்சிப்பாடி சுப்ரமணியர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் இந்திய குடிமகனை போன்று குறிஞ்சிப்பாடி விலாசத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வாங்கி கடந்த 2018ம் ஆண்டு பயன்படுத்தி வந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் எல்லப்பன்பேட்டை வி.ஏ.ஓ., சித்ரா விசாரணை நடத்தினார். அதில், தவனேஸ்வரன் போலி ஆவணங்களை தயார் செய்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து வி.ஏ.ஓ., சித்ரா அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் வீரசேகரன் வழக்கு பதிந்து, தவனேஸ்வரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us