/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறில் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரின் கட்டை விரல் கடித்து துண்டிப்பு
/
முன்விரோத தகராறில் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரின் கட்டை விரல் கடித்து துண்டிப்பு
முன்விரோத தகராறில் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரின் கட்டை விரல் கடித்து துண்டிப்பு
முன்விரோத தகராறில் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரின் கட்டை விரல் கடித்து துண்டிப்பு
ADDED : ஜூன் 01, 2024 04:21 AM
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலரின் கட்டை விரலை கடித்து துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் வனராஜ்,58; முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் . அதே ஊரை சேர்ந்த ஜீவானந்தம், குருநாதன் இவர்கள் இருவரும் கடந்த எட்டுமாதத்திற்கு முன்பு வனராஜிக்கு அதே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவர் வீட்டை வாடகைக்கு பார்த்து விட்டனர்.
பின் வனராஜ்க்கும், ஜீவானந்தத்திற்கும் மகளிர் குழுவில் பணம் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வனராஜ் வீட்டை காலி செய்ய வெங்கடேசன் வற்புறுத்தி வந்தார். வெங்கடேசனுக்கு ஆதரவாக ஜீவானந்தம், குருநாதன் இருவரும் இருந்துவந்தனர். வனராஜ் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.
இதன் காரணமாக நேற்று காலை 11:00 மணியளவில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குருநாதன், வனராஜின் இடது கை கட்ட விரலை கடித்து துண்டாக்கினார்.
இதனை தடுக்க வந்த வனராஜ் மகன் கார்த்திக்,30; தாக்கினர். இதில் படுகாயமடைந்த வனராஜ், கார்த்திக் இருவரையும் அருகில் இருந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக இருவரையும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குருநாதன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.