/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி
/
மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி
மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி
மாவட்ட மைய நுாலகத்தில் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி
ADDED : ஜூலை 08, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2 ஏ போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் வரவேற்றர். கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், வருவாய்த்துறை, ரயில்வே துறை, சுகாதாரத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். அப்போது, உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நுாலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.