ADDED : ஆக 06, 2026 03:11 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், ஆக. 7–
மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாகுறிச்சி, திருவேங்கடம் நகரை சேர்ந்தரவ் முகமது யூசப் மகன் உமர்பாரூக். இவரை, கடந்த 2017 ம் ஆண்டு மோசடி வழக்கில், மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், ஜாமில் வந்த உமர்பாரூக், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனையொட்டி, அவரை கைது செய்து ஆஜர்படுத்த கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
அதனையொட்டி, தலைமறைவாக இருந்த உமர்பாரூக்கை மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
