ADDED : மார் 10, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலூர்; வடலுாரில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் சிறுமி படுகாயமடைந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மண்டப மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி நர்மதா, 35. இவர் நேற்று முன்தினம் வடலூரில் இருந்து சேராக்குப்பம் செல்லும் சாலையில், ஸ்கூட்டரில் தனது மகள் கிருத்திகா, 12, உடன் சென்றார். அங்குள்ள அய்யனார் கோவில் அருகே ஸ்கூட்டர் சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த சிறுமி கிருத்திகா பலத்த காயமடைந்தார். நர்மதா லேசான காயங்களுடன் தப்பினார். காயமடைந்த சிறுமி கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது, வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.