ADDED : செப் 01, 2024 06:34 AM

நெய்வேலி, : நெய்வேலியில் பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில், அடைக்கப்பட்டார்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28, இரண்டாவது மெயின் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகன் அர்னால்டு, 24; இவர், கடந்த ஜூலை., 13 ம் தேதி நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சியில், ராட்டினத்தில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில், ஆகாஷ்.17; என்பவரை கத்தியால் குத்தினார்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர், அர்னால்டை மடக்கி பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தார் அர்னால்டு மீது தெர்மல் மற்றும் டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம், பரிந்துரையை ஏற்று பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், அர்னால்ட் நேற்று குண்டர் தடுப்பு சட்டடத்தல், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.