sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி

/

அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி

அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி

அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி


ADDED : ஜூலை 30, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், பொக்லைன் ஆபரேட்டர் தலைநசுங்கி இறந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், முதலை மேடு திட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் தினேஷ்குமார், 23; பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, சிதம்பரத்தில் இருந்து வேலை முடிந்து, மோட்டார் பைக்கில் வீடு திரும்பினார்.

சிதம்பரம் - சீர்காழி சாலையில், வைப்புச் சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் தினேஷ்குமார் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று, தினேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us