/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராவல் கடத்தல்: டிப்பர் பறிமுதல்
/
கிராவல் கடத்தல்: டிப்பர் பறிமுதல்
ADDED : மார் 12, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கிராவல் மண் கடத்திய டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஆலடி சாலையில் வந்த டிராக்டர் டிப்பரை மடக்கியபோது, டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து, டிராக்டர் டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தபோது, 2 யூனிட் கிராவல் மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.