/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் குறைகேட்பு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
/
கடலுாரில் குறைகேட்பு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
ADDED : செப் 17, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது.
முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்கள் கூட்டம் குறைந்தளவில் காணப்பட்டது.