ADDED : ஆக 13, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பேட்டை சண்முகா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்,45; புதுப்பேட்டை கடைவீதி பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின்பேரில் பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் 40 குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.