/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : செப் 10, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். அவருடன், துணை சேர்மன் வாசுதேவன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, கிளை செயலாளர்கள் குமார், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.