sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

/

1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

1 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது


ADDED : மே 05, 2024 03:38 AM

Google News

ADDED : மே 05, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, அதே பகுதியைச் சேர்ந்த பெரிய நாயகராஜ் மகன் விமல்ராஜ், 23; என்பவரின் வீட்டின் அருகில் உள்ள கீற்று கொட்டகையில் சோதனை நடத்தினர்.

அப்போது, 1,050 கிலோ அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து விமல்ராஜியிடம் விசாரணை நடத்தினர். அதில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பன்றி மற்றும் மாட்டுப் பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, விமல்ராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us