sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி

/

நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி

நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி

நகராட்சி கட்டட ஆய்வாளர் இல்லாமல் வீடு கட்டுவோர் அவதி


ADDED : ஜூன் 10, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் வீடு கட்டுவோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி நகராட்சியில் பணிபுரியும் கோகுலகிருஷ்ணன், பண்ருட்டியில் கூடுதல் பொறுப்பாக இருந்து வருகிறார். இவர் 3 நகராட்சிக்கும் பணியை கவனிப்பதால் பண்ருட்டி நகராட்சிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறார்.

இதனால் பண்ருட்டி நகராட்சியில் உடனடியாக கட்டட அனுமதி பெற முடியாத நிலை உள்ளது. கட்டட ஆய்வாளர் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்ட பின்பே அனுமதிக்கான பணம் கட்ட அனுமதிப்பதால் இவர் வருகைக்காக பலர் காத்திருப்பில் உள்ளனர்.

பலர் அனுமதியை எதிர்பார்க்காமல் அரசியல்வாதிகள்,ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் புதிய கட்டடம் கட்டுகின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சி கட்டட ஆய்வாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us