ADDED : மே 06, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம், : சேப்ளாநத்தம் கிராமத்தில் தனது மனைவியை காணவில்லை என கணவர் போலீ சில் புகார் செய்துள்ளார்.
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் கடந்த 3ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர் தீடிரென எழுந்து பார்த்த போது தனது மனைவி சிந்து காணமால் போனது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக் குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சிந்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.