/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்
/
மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : மார் 06, 2025 01:55 AM
விருத்தாசலம்: திட்டக்குடி அடுத்த செவ்வேரியை சேர்ந்தவர் மணிவேல், 38. இவருக்கும் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் ஆதிமூலம் மகள் தமிழரசி என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஆசினி, 9, சிவனேஷ், 7, என்ற குழந்தைகள் உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மணிவேல் வெளிநாடு சென்றதால், தாய் வீட்டில் குழந்தைகளுடன் தமிழரசி வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி 16ம் தேதி நாடு திரும்பிய மணிவேல் சென்று அழைத்தபோது, தமிழரசி வர மறுத்து விட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி குழந்தைகளுடன் தமிழரசி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மணிவேல் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.