ADDED : செப் 11, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுாரில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் நாகராஜ், துணை செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் அரிகிருஷ்ணன், மையக்குழு கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட பொருளாளர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.
இதில், மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க கட்டணத்தை ஆண்டிற்கு இருமுறை உயர்த்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நிர்வாகிகள் சக்திவேல், சிவக்குமார், ஞானசேகர், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.