/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு -- பாலுார் சாலை அதிகாரிகள் ஆய்வு
/
நடுவீரப்பட்டு -- பாலுார் சாலை அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 05, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு-குயிலாப்பாளையம் வரை நடந்து வரும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
நடுவீரப்பட்டு-பாலுார் சாலையில் நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு பாலத்திலிருந்து குயிலாப்பாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி சி.ஆர்.ஐ.டி.பி.,திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 53 லட்சம் மதிப்பில் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது.
தற்போது சாலை போடும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.இப்பணியில் தற்போது போடப்பட்டுள்ள சாலையில் ஜல்லிகள் போதுமானதாகவும், தரமாக உள்ளதா என நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் புதியதாக போடப்பட்டு வரும் சாலையை ஆய்வு செய்தனர்.