/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜே.சி.பி., வாகனத்தில் மோதி பைக்கில் வந்தவர் பலி
/
ஜே.சி.பி., வாகனத்தில் மோதி பைக்கில் வந்தவர் பலி
ADDED : மே 02, 2024 06:31 AM

புவனகிரி : புவனகிரியில் ஜே.சி.பி., வாகனத்தில் ஏற்றிவந்த மின் கம்பத்தில் மோதி, பைக்கில் வந்த லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி அடுத்த பெருமாத்தூர் மாதா கோவில் அருகே கடந்த வாரம் அரசு பஸ் வீட்டிற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. அந்த இடத்தில் மின்கம்பம் சேதமானதால், புதியதாக மின் கம்பம் அமைக்கும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு ஜே.சி.பி., இயந்திரத்தில் மின்கம்பங்களை ஏற்றிசென்றனர்.
விருத்தாசலம்-புவனகிரி சாலையில், ஜே.சி.பி., இயந்திரம் வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக விருத்தாசலம் மார்க்கம் இருந்து பைக்கில் வந்த நபர், ஜே.சி.பி.,யில் ஏற்றி சென்ற மினகம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தார். உடன் அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக, புதச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டவர் அன்ற இரவு உயிரிழந்தார்.
விபத்தில் இறந்தவர் மயிலாடுதுரை அருகே மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த பாபு,43; என்பது தெரிய வந்தது.
லாரி டிரைவரான இவர், விருத்தாசலத்தில் இருந்து மோட்டார் பைக்கில் சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இது குறித்து, பாபு மனைவி சண்முகப்பிரியா கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மின்துறையினர் அஜாக்கிரதையாக மின் கம்பத்தை ஜே.சி.பி., இயந்திரத்தில் ஏற்றி வந்ததால் விபத்து நடந்ததாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

