ADDED : ஆக 13, 2024 05:45 AM
கடலுார்: கடலுாரில் ெஹல்மெட் அணிந்த மர்ம நபர்கள், நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மனைவி தேன்மொழி, 59; இவர், நேற்று மாலை 4:15 மணியளவில், அப்பகுதியில் உள்ள காந்தி நகரில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், தேன்மொழியிடம் வழிகேட்பதுபோல் நடித்து, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத தேன்மொழி சத்தம் போட்டார். உடன் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் வேகமாக தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.