/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் கார்கில் வெற்றி நாள் பேரணி
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் கார்கில் வெற்றி நாள் பேரணி
எம்.ஆர்.கே., கல்லுாரியில் கார்கில் வெற்றி நாள் பேரணி
எம்.ஆர்.கே., கல்லுாரியில் கார்கில் வெற்றி நாள் பேரணி
ADDED : ஆக 01, 2024 06:53 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லுாரியில், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில், கார்கில் போர் வெற்றி நாள் பேரணி நடந்தது.
கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு பேரணியை துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணைமுதல்வர்அறிவழகன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, நகர வீதிகள் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.
ஏற்பாடுகளை என்.சி.சி., அதிகாரி சிற்றரசன், என்.எஸ்.எஸ்., அலுவலர் சித்திவிநாயகம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், ராஜகணபதி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.