/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அஞ்சலி
/
கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : ஆக 09, 2024 04:58 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறுபாக்கம் அடுத்த அடரியில், மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்குள்ள துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் செல்வராணி, நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், பழனிவேல், சிவக்குமார் உடனிருந்தனர். இதேபோல், மாங்குளம், காஞ்சிராங்குளம், பொயனப்பாடி கிராமங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பரங்கிப்பேட்டை
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பெருமாள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷெரீப், வழக்கறிஞர் தங்கவேல், கணேசமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், புருஷோத்தமன், பொற்செல்வி, லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.